பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சோம்நாத்துக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 11:31AM by PIB Chennai

சோம்நாத்துக்கு வரும் 11-ம் தேதி தாம் மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பத்திரிகைகளுக்கு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்த நாளுக்கும் சோம்நாத்துக்கும் இடையே உள்ள முக்கியத்துவத்தையும் சோம்நாத்தின் கலாச்சார சிறப்புகளையும் அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதும், சோம்நாத்தைப் பாதுகாப்பதிலும் அதன் பெருமையை மீட்டெடுப்பதிலும் உறுதியுடன் செயல்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மே 11-ம் தேதி சோம்நாத்துக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும்,  சோம்நாத்தின் கலாச்சார பாரம்பரிய சிறப்புகள் ஆகியவை குறித்து, சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். அனைத்துவிதமான சவால்களை எதிர்கொண்ட போதும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு சோம்நாத்தை பாதுகாத்து அதனை மீட்டெடுத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258945&reg=3&lang=1

***

SS/PLM/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2259011) வருகையாளர் எண்ணிக்கை : 9