புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா–இங்கிலாந்து பசுமை ஹைட்ரஜன் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 11:01AM by PIB Chennai

இந்தியா–இங்கிலாந்து பசுமை ஹைட்ரஜன் மாநாடு

பசுமை ஹைட்ரஜன் தொடர்பான தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்தியா–இங்கிலாந்து மாநாடு  பிப்ரவரி 27 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜனை பாதுகாப்பாகவும் பெரிய அளவிலும் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாட்டை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஹைட்ரஜன் பாதுகாப்பு மையம், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம்  மற்றும் டபிள்யுஆர்ஐ இந்தியா இணைந்து ஏற்பாடு செய்தன. அரசு, தொழில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, சர்வதேச தரநிலைகளுடன் இந்திய தரநிலைகளை எப்படி இணைப்பது போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், ஹைட்ரஜன் அமைப்புகளில் பாதுகாப்பு விதிமுறைகள், அபாய மதிப்பீடு, பாதுகாப்பான வடிவமைப்பு, மற்றும் புதிய சென்சார் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிப்பு போன்ற புதுமைகள் பற்றியும் நிபுணர்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.

மாநாட்டின் முடிவில், பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகவும் பெரிய அளவிலும் வளர்க்க இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உறுதியை வெளியிட்டன. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236256&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236339) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu