மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இஸ்ரேலுக்குப் பயணம்
மீன்வளத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு
प्रविष्टि तिथि:
16 JAN 2026 12:10PM by PIB Chennai
இஸ்ரேலின் எய்லாட்டில் நடைபெற்ற "கடல் உணவுப் பாதுகாப்பு: எதிர்கால கடல்" என்ற இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் 2026 ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணம், மீன்பிடி, மீன்வளர்ப்புத் துறையில் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக அமைந்தது.
அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், உச்சிமாநாட்டின் தொடக்க அமர்விலும் நிறைவு அமர்விலும் பங்கேற்றார். மாநாட்டுக்கு இடையே அவர் இஸ்ரேலின் வேளாண் அமைச்சர் திரு அவி டிக்டர், பிராந்திய ஒத்துழைப்பு அமைச்சர் திரு டேவிட் அம்சலேம், மூத்த அரசு அதிகாரிகள் தனியார் துறை பிரதிநிதிகள் போன்றோருடன் கலந்துரையாடினார். இந்த மாநாட்டில் கானா, ஜார்ஜியா, அஜர்பைஜான் அமைச்சர்கள், ஜோர்டான், மொராக்கோ, ருமேனியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உணவுப் பாதுகாப்பு, நீலப் பொருளாதாரம் ஆகியவை குறித்த உலகளாவிய அமைச்சர்கள் குழு விவாதத்திலும் அமைச்சர் பங்கேற்றார். மீன்வளத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்த அவர், மீன்வளத்தையும் மீன்வளர்ப்பையும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்தார். உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த நிலையான நீலப் பொருளாதார நடைமுறைகள், புதுமை, சர்வதேச ஒத்துழைப்பு, பொறுப்பான வள மேலாண்மை ஆகியவற்றிற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215197®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215260)
आगंतुक पटल : 12