சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சகம், துடிப்பான குஜராத் பிராந்திய கண்காட்சியில் விரிவான அரங்கை நிறுவியுள்ளது

प्रविष्टि तिथि: 11 JAN 2026 6:39PM by PIB Chennai

குஜராத்தின் ராஜ்கோட்டில் 2026 ஜனவரி 11 முதல் 15 வரை நடைபெறும் துடிப்பான குஜராத் பிராந்திய கண்காட்சி 2026-ல், மத்திய அரசின் முதன்மை சுகாதாரத் திட்டங்களை காட்சிப்படுத்துவதற்காக, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அரங்கை அமைத்துள்ளது.

சுமார் 700 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அரங்கை, மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில அரசு மற்றும் மாவட்ட சுகாதார பிரதிநிதிகள் இணைந்து திறந்து வைத்தனர். "ஆரோக்கியமான பாரதம், உன்னத பாரதம்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அரங்கம், பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதற்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த அரங்கில் சுகாதார அமைச்சகத்தின் 12 திட்டங்களை எடுத்துரைக்கும் 26 பகுதிகள் உள்ளன. இந்த அரங்குகள் பார்வையாளர்களுக்கு பரந்த அளவிலான சுகாதார சேவைகள், தகவல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை இலவசமாக வழங்குகின்றன.

இந்தக் கண்காட்சியில் சுகாதார அமைச்சகம் பங்கேற்பது, நோய்த் தடுப்பை மேம்படுத்துதல், அரசு சுகாதாரத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை மேம்படுத்துதல், சமூக ஈடுபாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213454&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213485) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी