நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுங்க அனுமதிக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 27 DEC 2025 1:31PM by PIB Chennai

தில்லி சுங்க மண்டலத்தின் தலைமை சுங்க ஆணையரின் தலைமையில், தில்லி சுங்கத்துறையால், ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள கல்பனா சாவ்லா மாநாட்டு அரங்கில் சுங்க அனுமதி வசதிக்குழு  கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்தாவரத் தனிமைப்படுத்தல் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற அரசு முகமைகளும், சுங்க முகவர் சங்கம், அசோசெம் போன்ற வர்த்தக சங்கங்களும் கலந்துகொண்டன. காப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால்  அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய கொள்கை மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனகுறிப்பாக தில்லி சுங்க மண்டலத்திற்குள் அவற்றின் செயலாக்கக் கட்டமைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பங்குதாரர்கள் முக்கிய செயல்பாட்டுச் சிக்கல்களை எழுப்பினர், அவை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டன, இது வசதிகளை வலுப்படுத்தும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைக்குரிய விளைவுகளுக்கு வழிவகுத்தது. கூட்டத்தின் வெளிப்படையான மற்றும் கூட்டு அணுகுமுறை பரவலாகப் பாராட்டப்பட்டது, இது சுங்க செயல்முறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியது. மேலும் ஏற்றுமதி-இறக்குமதி சமூகத்தில் ஒருங்கிணைப்பை மேம்படுத்தியது.

எதிர்காலத்தில், வணிகம் செய்வதை எளிதாக்குவது என்பது சுங்கத்துறை, காப்பாளர்கள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு தொடர்ச்சியான பயணம் என்று தில்லி சுங்க மண்டலம் வலியுறுத்தியதுமுடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை, செயல்முறைகளில் அணுகல்தன்மை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தில்லி சுங்கத்துறை நம்பிக்கை, செயல்திறன் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209066&reg=3&lang=1

***

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2209121) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी