பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீர பால தினத்தன்று வீர சாகிப்சாதாக்களின் தியாகத்தை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 9:27AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று வீர பால தினத்தையொட்டி,  வீர சாகிப்சாதாக்களின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார். இந்த நாள் தைரியம், உறுதி, நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக  எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"வீர பால தினம் என்பது வீர சாகிப்சாதாக்களின் தியாகத்தை நினைவுகூருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வணக்கத்திற்குரிய நாள். மாதா குஜ்ரியின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் அழியாத போதனைகளையும் நாம் நினைவுகூர்கிறோம். இந்த நாள் தைரியம், உறுதி, நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவர்களின் வாழ்க்கையும் லட்சியங்களும் தலைமுறை தலைமுறையாக மக்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்."             

***

(Release ID: 2208647)

AD/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2208801) வருகையாளர் எண்ணிக்கை : 66