அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மரபணு திருத்த பகுப்பாய்வு தொடர்பான சீர்மிகு மையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 22 DEC 2025 5:31PM by PIB Chennai

ஆய்வக சோதனை நடைமுறைகளின்போது மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைப்பதற்கான தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக புதிய சீர்மிகு மையத்தை ஏற்படுத்துவதற்கு, பெங்களுரில் உள்ள ஜவஹர்லால் நேரு நவீன அறிவியில் ஆராய்ச்சி மையம் மற்றும் தில்லியில் உள்ள கிறிஸ்பர்பிட்ஸ் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்மூலம் உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, டிஎன்ஏ மரபணுவை திருத்தியமைக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வகை செய்கிறது.

பொதுத்துறை – தனியார் துறை இணைந்து இந்த பகுப்பாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக தொழில்துறையும் கல்வி நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மரபணு திருத்தம் மற்றும் மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட கிறிஸ்பர்பிட்ஸ் நிறுவனத்துடன் ஜவஹர்லால் நேரு நவீன அறிவியில் ஆராய்ச்சி மையமும் இணைந்து அடிப்படை உயிரி மருத்துவ அறிவியல் ஆய்வுப் பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207454&reg=3&lang=1

***

SS/SV/LDN/SE


(रिलीज़ आईडी: 2207519) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी