உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் சிறிய அளவிலான உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் உதவிகள்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 2:05PM by PIB Chennai

நாட்டில் சிறு அளவிலான உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களை அமைப்பதற்குத் தேவையான உதவிகளை அரசு வழங்கும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் பன்னாட்டு உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது காரணமாக உள்ளூரில் உள்ள சிறு அளவிலான உணவுப்பதப்படுத்துதல் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கான குறிப்பிட்ட தரவுகள் அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டம், உணவுப் பதப்படுத்தும் தொழிலில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்துதல் நிறுவனங்கள் வடிவமைப்புத் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் கீழ், உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கிடும் என்று அவர் தெரிவித்தார். எனினும், மத்திய அரசு சொந்தமாக உணவுப் பதப்படுத்தும் துறையை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான அமைப்பு ரீதியில் உணவுப்பதப்படுத்தும் துறையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் மூலதன நிதியுடன் நபார்டு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 156 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரின் மிகச் சிறிய அளவிலான உணவுப் பதப்படுத்தும் நிறுவன கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 17,210 திட்டங்களுக்கும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 20 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205781&reg=3&lang=1

***

SS/SV/KPG/SE

 
 
 

(रिलीज़ आईडी: 2206311) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी