கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கப்பல் துறையில் உலகளாவிய கூட்டாண்மைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
13 DEC 2025 5:49PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தளவாடங்களில் ஒத்துழைப்புக்காக வெளிநாட்டு அரசுகள், பலதரப்பு அமைப்புகள் மற்றும் உலகளாவிய கடல்சார் தொழில்முனைவோர்களுடன் அரசு தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. துறைமுக நவீனமயமாக்கல், கப்பல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பசுமை கப்பல் முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கடல்சார் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான கூட்டாண்மைகள் இதில் அடங்கும்.
இந்தியாவில் துறைமுகத் துறையிலும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம், கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகம், தமிழ்நாட்டில் உள்ள சென்னை துறைமுகம் போன்ற பல்வேறு இடங்களில் கொள்கலன் முனையங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனம் ஒன்று இயக்குகிறது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203531®=3&lang=1
***
SS/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2203604)
வருகையாளர் எண்ணிக்கை : 42