சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட உதவி

प्रविष्टि तिथि: 12 DEC 2025 1:04PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகள் உட்பட சாமானியர்களுக்கு  குறைந்த கட்டணத்தில் , தரமான மற்றும் விரைவான சட்ட சேவைகளை கிடைக்கச் செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்ட சேவைகள் ஆணையச்  சட்டம், 1987, மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு சிறந்த இலவச  சட்ட சேவைகளை வழங்குகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சட்ட சேவைகள் திட்டம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், லடாக் மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி தவிர அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சிறப்பு சட்ட சேவைகள் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதித் துறை  (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர், மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

***

SS/PKV /KR


(रिलीज़ आईडी: 2203018) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी