எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த, கான்பூர் ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்எம்டிசி

प्रविष्टि तिथि: 06 DEC 2025 3:13PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் எனப்படும் என்எம்டிசி, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் உள்ளிட்டவற்றில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை தமது நிறுவனத்தில் ஊக்குவிப்பதற்காக, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஐடி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்எம்டிசி சார்பாக அதன் டிஜிட்டல் பிரிவு மேலாண்மை இயக்குநர் திரு சத்யேந்திர ராயும் கான்பூர் ஐஐடி சார்பில் அதன் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அசோக் தே ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒத்துழைப்பின் மூலம், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற முக்கிய துறைகளில் என்எம்டிசி, கான்பூர் ஐஐடி-யுடன் இணைந்து செயல்படும். மேலும், இரு நிறுவனங்களும் இணைந்து பயிற்சித் திட்டங்களையும் நடத்தும்.

இந்த ஒத்துழைப்பு குறித்து பேசிய என்எம்டிசி-யின் தலைமைப் பொது மேலாளர் திரு அமிதவா முகர்ஜி, இந்த ஒத்துழைப்பு, டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தி, எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப அடித்தளத்தை உருவாக்கவும் உதவும் என்றார்.

***

(Release ID: 2199783)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2199879) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी