பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதி

प्रविष्टि तिथि: 02 DEC 2025 3:30PM by PIB Chennai

உள்ளாட்சி அமைப்புகள் மாநிலப் பட்டியலில் வருவதால், அவற்றை அமைத்துச் செயல்படுத்துவது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும். மத்திய அரசு, 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை விடுவிக்கிறது. இந்த நிதியை அனைத்து மட்டப் பஞ்சாயத்துகளுக்கும் மாநில அரசுகளே பிரித்து வழங்குகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பல்வேறு மட்டங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள பஞ்சாயத்து மானியங்களின் விவரங்களை மாநில அரசு மத்திய அரசுக்குப் புகாரளித்துள்ளது. இதன்படி, மாவட்டப் பஞ்சாயத்தில் 20.21 சதவீதம், வட்டாரப் பஞ்சாயத்தில் 18.90 சதவீதம், மற்றும் கிராமப் பஞ்சாயத்தில் 23.39 சதவீதம் மானியங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

வேலை நோக்கம் மாற்றம், நிலப் பிரச்சினைகள் மற்றும் பஞ்சாயத்துகளால் பணிகள் ரத்து செய்யப்படுதல் ஆகியவையே நிதி பயன்படுத்தப்படாமல் இருக்க முக்கியக் காரணங்களாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதிக் குழு மானியங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 'eGramSwaraj' மற்றும் 'Audit-Online' போன்ற டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தி நிதிக் கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இன்று (02 டிசம்பர் 2025) மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197540&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2197907) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी