பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின கலை பயிலரங்கு மற்றும் கண்காட்சி புதுதில்லியில் தொடங்கியது
Posted On:
24 NOV 2025 1:46PM by PIB Chennai
மத்திய பழங்குடியின நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி சங்கம் சார்பாக 3 நாள் நடைபெறும் புவிசார் குறியீடு கொண்ட பழங்குடியின கலை பயிலரங்கு மற்றும் கண்காட்சி – கலாச்சாரத் திருவிழா புதுதில்லியில் இன்று தொடங்கியது.
2025 நவம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ள இந்நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 139 மாணவர்கள், கலை மற்றும் இசை ஆசிரியர்கள் 34 பேர், 10 பெரும் கலைஞர்கள் இணைகின்றனர்.
இந்தியாவின் புவிசார் குறியீடை பெற்றுள்ள பழங்குடி கலை பாரம்பரியங்களை கொண்டாடும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், தேசிய பழங்குடியினர் மாணவர் கல்வி சங்க இணை செயலாளர் (நிர்வாகம்) திரு விபின் குமார் வரவேற்புரை ஆற்றினார்.
இத்தொடக்க நிகழ்ச்சியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தெம்சா நடனம் (ஒடிசா), ஜான்சரி நடனம் (உத்தராகண்ட்), மிசோ நாட்டுப்புற நடனம் (மிசோரம்) நாட்டுப்புறப் பாடல் (தாத்ரா & நாகர்ஹவேலி), தேசபக்திப் பாடல் (மத்தியப் பிரதேசம்) ஆகியவை இடம்பெற்றன.
பிரபல புவிசார் குறியீடு நிபுணர் ஸ்வேதா மேனன், புவிசார் குறியீடு பெற்ற கலைகளின் மகத்துவம் குறித்து நேரடியாக எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193485
***
SS/IR/LDN/SH
(Release ID: 2193740)
Visitor Counter : 3