வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இருதரப்பு செயல்பாட்டு முறையை மீண்டும் செயல்படுத்த பியூஷ் கோயல் வெனிசுலாவிக்கு அழைப்பு

प्रविष्टि तिथि: 15 NOV 2025 12:45PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெனிசுலாவின் சுற்றுச்சூழல் சுரங்க மேம்பாட்டு அமைச்சர் திரு. ஹெக்டர் சில்வாவுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, எண்ணெய் துறைக்கு அப்பால் இந்தியாவுடனான பொருளாதார ஈடுபாட்டை விரிவுபடுத்துவதில் வெனிசுலா தரப்பு ஆர்வம் காட்டியது, இதில் முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்பு மற்றும் இந்திய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவை அடங்கும்.

இந்தியா-வெனிசுலா கூட்டுக் குழு செயல்பாட்டு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு கோயல் வலியுறுத்தினார். அதன் கடைசி கூட்டம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு நடைபெற்றது. வெனிசுலாவில் ஓஎன்ஜிசி-யின் தற்போதைய செயல்பாடுகள், சுரங்கம் மற்றும் ஆய்வு ஆகியவற்றில் வலுவான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். மருந்து வர்த்தகத்தை எளிதாக்க இந்திய மருந்து துறையை ஏற்றுக்கொள்வதை வெனிசுலா பரிசீலிக்கலாம் என்று கூறிய அமைச்சர், வாகன உற்பத்தி  துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை பரிந்துரைத்தார். வெனிசுலாவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் வணிகங்களுடன் இந்தியா ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.

***

SS/PVK/SH


(रिलीज़ आईडी: 2190343) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu