சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு சவுதி அரேபியா பயணம் - அந்நாட்டு அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் இருதரப்புப் பேச்சு

2026-ம் ஆண்டுக்கான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 09 NOV 2025 6:41PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு 2025 நவம்பர் 07 முதல் 09-ம் தேதி வரை மூன்று நாட்கள் சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் . திரு கிரண் ரிஜிஜுவுடன் மத்திய அரசின் உயர்மட்டக் குழுவும் சென்றது . சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று (நவம்பர் 09, 2025) , மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் இருதரப்புப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது, ​​இரு அமைச்சர்களும் ஹஜ் புனிதப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். சுமூகமான, வசதியான புனிதப் பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் குறித்து இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி இந்தியாவிற்கான ஒதுக்கீடு 175,025 ஆக உறுதி செய்யப்பட்டது.

மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தமது பயணத்தின் போது, ​​ரியாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். அமைச்சரின் இந்தப் பயணம், இந்தியா-சவுதி அரேபியா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188075

***

SS/PLM/RJ


(Release ID: 2188108) Visitor Counter : 7