கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மும்பையில் இந்திய கடல்சார் வாரம் 2025-ஐ தொடங்கி வைத்தார்.

प्रविष्टि तिथि: 27 OCT 2025 6:04PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய கடல்சார் கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மும்பையின் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் இந்திய கடல்சார் வாரம் 2025-ஐ  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கடல்சார் துறை இந்தியாவின் வலிமை, உறுதி மற்றும் நிலைத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார். இது இந்தியாவின் கடல்சார் தருணம். இது இந்தியாவின் நுழைவாயிலை உலகின் நுழைவாயிலாக மாற்றுகிறது என்று அவர் அறிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் காரணமாக, இந்தியா இன்று உலக கடல்சார் வரைபடத்தில் ஒரு வளர்ந்து வரும் சக்தியாக நிற்கிறது என்றார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இந்திய கடல்சார் வாரம் 2025 ஐ "இந்தியாவின் கடல்சார் பயணத்தில் ஒரு திருப்புமுனை" என்று விவரித்தார். கொள்கை சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் சாதனை முதலீடு மூலம் உலகின் தலைசிறந்த கடல்சார் சக்திகளில் இந்தியாவை நிலைநிறுத்துவதற்கான அரசின் உறுதியை இந்த உச்சிமாநாடு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183018

(Release ID: 2183018)

***

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2186674) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi