நிலக்கரி அமைச்சகம்
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பொன்விழா மற்றும் எஸ்இசிஎல்-ன் மாணிக்க விழாவை நினைவுகூரும் இந்திய அஞ்சல் சிறப்பு உறை வெளியீடு
Posted On:
28 OCT 2025 6:17PM by PIB Chennai
கோல் இந்தியா நிறுவனத்தின் பொன் விழா மற்றும் அதன் துணை நிறுவனமான எஸ்இசிஎல்-ன் மாணிக்க விழாவை நினைவுகூரும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு உறை வெளியிடப்பட்டது.
கோல் இந்தியாவின் நிறுவனத் தலைவர் திரு பி.எம். பிரசாத், எஸ்இசிஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஹரீஷ் துஹான், செயல்பாட்டு இயக்குநர்கள், தலைமை கண்காணிப்பு அதிகாரி மற்றும் சத்தீஸ்கர் அஞ்சல் வட்டார தலைவர் திரு தினேஷ் குமார் மிஸ்த்ரி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சத்தீஸ்கர் அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த சிறப்பு அட்டை, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஐம்பது ஆண்டு கால பங்களிப்பிற்கும், எஸ்இசிஎல்-ன் 40 ஆண்டுகால சிறப்பான நிலக்கரி உற்பத்திக்கும் நிரந்தர நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183437
(வெளியீட்டு அடையாள எண்: 2183437)
***
SS/VK/SH
(Release ID: 2183573)
Visitor Counter : 5