அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உலகளாவிய மரபணு ஒத்துழைப்பு குறித்த சர்வதேச கலந்துரையாடல் புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 28 OCT 2025 5:55PM by PIB Chennai

சர்வதேச மரபியல் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையம் சார்பில் சார்ஸ் கோவி 2-க்கான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான மரபணு ஆதாரங்களை ஆராய்தல் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், உலகளாவிய பொது சுகாதார தயார்நிலையை வலுப்படுத்துவதில் மரபணு ஆதாரங்களின் பங்கு பற்றி ஆலோசிக்கப்பட்டது.

 பெருந் தொற்றுநோயின் அனுபவங்கள், மரபணு கண்காணிப்பு, ஆராய்ச்சி மொழிபெயர்ப்பு மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலையை மேம்படுத்த நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சர்வதேச மரபியல் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மைய இயக்குநர் பேராசிரியர் லாரன்ஸ் பேங்க்ஸ், இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான அறிவியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எதிர்கால தொற்று நோய்கள் தவிர்க்க முடியாதவை என்றும், எப்போது, எங்கே எழும் என்பது நிச்சயமற்றது என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183423

 (வெளியீட்டு அடையாள எண்: 2183423)

***

SS/VK/SH

 


(रिलीज़ आईडी: 2183559) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी