பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 24 OCT 2025 9:02AM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின்  கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது;

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்த  விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்த  ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி
 

***

(Release ID: 2182002)

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2182055) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam