ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தூய்மையை மேம்படுத்தவும் நிலுவைப் பணிகளை பைசல் செய்யவும் ஊரக மேம்பாட்டுத்துறை சிறப்பு இயக்கம் 5.0-ஐ தொடங்கியது
Posted On:
22 OCT 2025 3:44PM by PIB Chennai
தூய்மையை மேம்படுத்தவும் நிலுவைப் பணிகளை பைசல் செய்யவும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதல்படி, ஊரக மேம்பாட்டுத்துறை சிறப்பு இயக்கம் 5.0-ஐ தொடங்கியது.
இந்த சிறப்பு இயக்கத்தின் முதல் 15 நாட்களில் (2025, அக்டோபர் 2-16) கீழ்காணும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
தூய்மை இயக்கம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் குறைதீர்ப்பு 60 சதவீதமும், இதில் மேல்முறையீடுகள் 44 சதவீதமும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள் 41 சதவீதமும் பைசல் செய்யப்பட்டன. நேரடி கோப்புகள் 35 சதவீதமும், மின்னணு கோப்புகள் 58 சதவீதமும் ஆய்வு செய்யப்பட்டன.
2025 அக்டோபர் 9 அன்று கிரிஷி பவன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டதுடன் 2025 அக்டோபர் 15 அன்று தூய்மைப் பணியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. சிறப்பு இயக்கம் 5.0 இலக்கில் அடையாளம் காணப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை 2025 அக்டோபர் 31-க்குள் பைசல் செய்ய ஊரக மேம்பாட்டுத்துறை உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181504
***
SS/SMB/KPG/SH
(Release ID: 2181608)
Visitor Counter : 10