பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையின் 38-வது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
10 OCT 2025 11:20AM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறை குறித்த 38-வது (செப்டம்பர் 2025) அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளின் வகைமைகள் பற்றிய பகுப்பாய்வையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பைசல் செய்யப்பட்ட தன்மையையும் வழங்குகிறது.
2025 செப்டம்பர் மாதத்தில் குறைதீர்ப்பு அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2025-ல் 62,216 என்ற எண்ணிக்கையிலிருந்து செப்டம்பர் 2025-ல் 82,790 ஆக அதிகரித்துள்ளது. சிபிகிராம்ஸ் போர்ட்டலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 1,74,587 குறைகள் நிலுவையில் இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
சிபிகிராம்ஸ் போர்ட்டல் மூலம் 2025 செப்டம்பரில் புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ள விவரங்களை இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, பல்வேறு வழிகளில் மொத்தம் 78,353 புதிய பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். பின்னூட்ட அழைப்பு மையத்தின் மூலம் 2025 செப்டம்பரில் 81,937 பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பொதுசேவை மையங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட குறைகள் குறித்து மாநில வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. செவோட்டம் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்த விவரங்களை தெரிவித்துள்ள இந்த அறிக்கை 2025-26 நிதியாண்டில் 2025 செப்டம்பர் 30 வரை 116 பயிற்சி திட்டங்களை மேற்கொண்டு 3,956 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177190
***
SS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2177441)
आगंतुक पटल : 36