சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக பெருமூளை வாதம் தினம்: சென்னையிலுள்ள பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது

Posted On: 07 OCT 2025 3:22PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, அதன் தேசிய நிறுவனங்கள் மற்றும் கூட்டு மண்டல மையங்களுடன் இணைந்து, உலக பெருமூளை வாதம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

சென்னையில் உள்ள பல்வகை மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம், பெருமூளை வாதம் மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அவர்களுக்குத் தகவல் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் மூலம் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தியது.

ஒடிசா, கொல்கத்தா, திரிபுரா, நெல்லூர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் போன்ற செயல்பாடுகளை நடத்தி, இந்த தினத்தைக் கடைப்பிடித்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175773

***

AD/EA/SH


(Release ID: 2175990) Visitor Counter : 7
Read this release in: English , Urdu , Hindi