சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

01.09.2025 முதல், தில்லி மிருகக்காட்சிசாலையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இல்லை

Posted On: 15 SEP 2025 5:42PM by PIB Chennai

மிருகக்காட்சிசாலையில் பறவைகள் அல்லது இடம்பெயர்வு பறவைகளில் நீர் பறவைகளின் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தில்லி தேசிய விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது.

 செப்டம்பர் 12025 க்குப் பிறகு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட எந்த மாதிரிகளிலும் ஹெச்5என்1 பறவை காய்ச்சல் வைரஸ் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த பாலூட்டிகளுக்கும் இன்றுவரை இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த விலங்குக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை.

 பறவைகள்விலங்குகள் மற்றும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தீவிர சுகாதாரம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய விலங்கியல் பூங்கா தீவிரமாக கண்காணித்து  வருகிறது மற்றும் நோயைக் கட்டுப்படுத்த நிலையான நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

 மிருகக்காட்சிசாலையைத் திறப்பது குறித்து குறிப்பிட்ட ஆணையத்தின் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பரிசீலிக்கப்பட்டு  முடிவுகள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

 

                                                                                                       ***

AD/BR/SH


(Release ID: 2166991) Visitor Counter : 2
Read this release in: Hindi , English , Urdu