வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்த ஃபைசர் நிறுவனத்துடன், டிபிஐஐடி ஒப்பந்தம்

Posted On: 04 SEP 2025 3:07PM by PIB Chennai

சுகாதார பராமரிப்பில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு தொழில், வர்த்தக மேம்பாட்டு துறையான டிபிஐஐடி, ஃபைசர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மருந்து துறையில் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு, நிதி சாராத ஆதரவு என இரண்டையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மருந்து துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி சாராத ஆதரவானது ஆய்வகங்களில் இருந்து சந்தைக்கான பயணத்தை விரைவுபடுத்தும். டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 60 லட்ச ரூபாய் உதவி வழங்கப்படுவதுடன் 18 மாத தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

தொற்று அல்லாத நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆதரவு வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய டிபிஐஐடி இணைச் செயலாளர் திரு சஞ்சய், மருந்து துறையில் இந்தியா மேலும் முன்னேற்றம் அடைய புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163676

***

SS/PLM/AG/DL


(Release ID: 2163841) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi