பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்

Posted On: 03 SEP 2025 6:41PM by PIB Chennai

குஜராத் மாநிலம் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இன்று பார்வையிட்டார்.  இந்தப் பயணத்தின்போது, முக்கிய கடற்படை கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்களை அவர் பார்வையிட்டதுடன், கட்டுமான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் திட்ட பங்குதாரர்களுடன் கலந்துரையாடிவருணா கடற்படை வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

லோதலில் உள்ள வரலாற்று தொல்பொருள் தளத்தையும் கடற்படைத் தளபதி பார்வையிட்டார். இது இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்துடன் இந்திய கடற்படையின் தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

நிஷாங்க் போர்க்கப்பல், ஐஎல்-38 எஸ்டி கடல்சார் உளவு விமானம்கடற்படை ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை கடற்படைத் தளபதி பார்வையிட்டார். 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் 1 ஏ கட்டத்தின் முன்னேற்றம் குறித்து குஜராத், டாமன் மற்றும் டையு கடற்படைப் பகுதியின் அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் வாசுதேவ், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் பொறுப்பு அதிகாரி கமாண்டர் ரஞ்சோத் சிங் ஆகியோர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு விளக்கமளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163432

 

***

(Release ID: 2163432)

SS/BR/KR


(Release ID: 2163601) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi