நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2025 3:36PM by PIB Chennai

ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், சுற்றுலாத் தலமாகவோ, கலாச்சார மையங்களாகவோ, வாழ்விடங்களாகவோ அல்லது தொழில்துறை பயன்பாட்டிற்காகவோ மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி, பொதுத்துறை நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூங்காக்கள், சுரங்க சுற்றுலாத் தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சூரிய சக்தித் திட்டங்கள் போன்ற பல்வேறு மறுபயன்பாட்டு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் சுரங்கத் திட்ட தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மூடப்பட்டுள்ள மற்றும் மறுபயன்பாட்டிற்கான நிலக்கரி சுரங்கங்கள் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152983

***

AD/SV/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2153235) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali