ஜல்சக்தி அமைச்சகம்
நாட்டில் 15.67 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு வி. சோமண்ணா
Posted On:
28 JUL 2025 1:47PM by PIB Chennai
நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 2024-ம் ஆண்டிற்குள் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிப்பதற்காக மத்திய அரசு 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தை தொடங்கியது.
இந்த இயக்கம் தொடங்கிய போது, 3.23 கோடி (16.7%) ஊரகப் பகுதி வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி இருந்தது.
ஜல்ஜீவன் இயக்கம் – இல்லந்தோறும் குடிநீர் இயக்கத்தின் கீழ் 23.07.2025 நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேலும் 12.44 கோடி ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் 23.07.2025 நிலவரப்படி மொத்தம் உள்ள 19.36 கோடி ஊரகப் பகுதி வீடுகளில் 15.67 கோடி (80.95%) ஊரகப்பகுதி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்தின் நோக்கத்தை அடையும் வகையில் ஜல் ஜீவன் இயக்கம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் 2025–26-ம் ஆண்டு பட்ஜெட் உரையின் போது கூறினார்.
இத்தகவலை ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149208
***
AD/SM/IR/RJ/KR
(Release ID: 2149307)