சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் 2025- ஐ மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தொடங்கி வைத்தார்

Posted On: 10 JUL 2025 2:56PM by PIB Chennai

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று தில்லியின் யசோபூமியில் இந்தியாவின் வாகன மின்மயமாக்கலுக்கான இந்தியாவின் எதிர்கால திட்ட வரைபடம் குறித்த இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் 2025 அமர்வைத் தொடங்கி வைத்தார்.

நாட்டில் பசுமை இயக்கம் மற்றும் மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்பின் மேம்பாட்டிற்கு உத்வேகம் அளிப்பதற்கான மோடி அரசின் உறுதிப்பாடு இதற்கு ஒரு சான்றாகும் என்று அமைச்சர் கூறினார்.

வேகமாக  பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வரும் நிலையில் தூய்மையான இயக்க பயணத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று திரு மல்ஹோத்ரா கூறினார். மேலும், மின்சார வாகன மறுசீரமைப்பு விதிமுறைகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சுங்க வரி விலக்குகள் போன்ற கொள்கைகள் போக்குவரத்தை மேலும் அணுகக்கூடியதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

மின்சார இயக்கத்திற்கு மாறுவது என்பது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், பொருளாதார மீள்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்கும் ஒரு தேசிய கட்டாயமாகும் என்று திரு மல்ஹோத்ரா கூறினார்.

சாலை, ரயில் மற்றும் கிடங்குகளை ஒருங்கிணைக்கும் சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வரும் பல்வகை போக்குவரத்து முறைகள் மாதிரி பூங்காக்கள் இப்போது பசுமை எரிசக்தி ஏற்பாடுகள் மற்றும் மின்சார-நட்பு வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தளவாடச் செலவுகளைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், சுத்தமான மற்றும் இணைக்கப்பட்ட போக்குவரத்து மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

2030-ம் ஆண்டுக்குள் 500கிகா வாட்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், சுத்தமான இயக்க தீர்வுகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும் நிலையில்  உள்ளது என்றும், மின்சாரம் மட்டுமல்ல - பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்கால போக்குவரத்தை உருவாக்குமாறு தொடர்புடைய துறையினரை  வலியுறுத்தினார்.

இந்தியாவின் பருவநிலை மற்றும் இயக்கத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பேட்டரி சேமிப்பு தொழில்நுட்பங்கள் நமது எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், தொழில்துறை தலைவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய வேண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் பேட்டரி மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு போன்ற  தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க தொழில்துறை மற்றும் வணிக வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், இந்த உந்துதல் இப்போது 2070 இல் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதை நோக்கி செலுத்தப்படுவதாகவும் அமைச்சர்  கூறினார். இது  பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முக்கிய இலக்காகும் என அவர் கூறினார்.

---

(Release ID 2143693)

AD/TS/PKV/KPG/DL


(Release ID: 2143840) Visitor Counter : 2