பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை வருடாந்திர பாதுகாப்பு ஆய்வை நடத்தியது

Posted On: 04 JUL 2025 5:00PM by PIB Chennai

இந்திய கடற்படையின் 8-வது வருடாந்திர பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் 2025, ஜூலை 02 முதல் 03-ம் தேதி வரை கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. நேரடியாகவும், இணையதள மூலமாகவும் என இரு வகைகளிலும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கடற்படை உயர் அதிகாரிகள், அனைத்து கட்டளை தலைமையகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் திரு வி. ஸ்ரீனிவாஸ், தலைமை உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

ஆய்வுக் கூட்டத்தின் போது பாதுகாப்பு தொடர்பான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. செயல்பாட்டு அம்சங்களை  பகுப்பாய்வு செய்து பாதுகாப்பு சூழலை வலுப்படுத்தும் வகையில் கடற்படை ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

-----

(Release ID: 2142228)

AD/TS/PLM/KPG/DL


(Release ID: 2142306)