உள்துறை அமைச்சகம்
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரை
Posted On:
29 JUN 2025 10:30PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிஜாமாபாத் நகரின் முக்கியத் தலைவர் டி. ஸ்ரீனிவாஸின் உருவச்சிலையை திறந்து வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதுடன், நிஜாமாபாத்தில் அதன் தலைமையகத்தை அமைப்பதன் மூலம் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நாற்பது ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
தேசிய மஞ்சள் வாரியத்தின் மூலம் தரமான மஞ்சளை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை உலக அளவில் விற்பனை செய்ய முடியும் என்றும் கூறினார். மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க இந்த வாரியம் வகை செய்யும் என்றும் அவர் கூறினார். மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய விற்பனை மையமாக உருவெடுப்பதற்கும் இது விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்று திரு அமித் ஷா கூறினார்.
-----
(Release ID: 2140680)
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2140766)