புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய புள்ளியியல் அலுவலகம் தரமான தரவுகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டுடன் டிஜிட்டல் மாற்றத்துக்கான முயற்சிகளை விரைவுபடுத்துகிறது

Posted On: 28 JUN 2025 10:20AM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), கடந்த ஆண்டு அதன் விரிவான டிஜிட்டல் மாற்றப் பயணத்தைத் தொடங்கி அதில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு புள்ளியியல் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு  (2024) ஜூன் 29 அன்று தேசிய புள்ளியியல் தினத்தன்று -சங்க்யிகி (eSankhyiki) போர்ட்டல் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், அதனைத் தொடர்ந்து புதிய டிஜிட்டல் தொகுதிகள், போர்ட்டல்கள் மற்றும் இணையதளங்களை வெற்றிகரமாக அறிமுகம் செய்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வேகம் தொடர்கிறது.

 இது தரவு பரவல் மற்றும் தரவு சேகரிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் முக்கிய கட்டத்தைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரவு அணுகலை மேம்படுத்தும் பல முக்கிய டிஜிட்டல் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. இந்த முன்னேற்றங்களில் முக்கியமானவை டிஐ ஆய்வகம் எனப்படும் தரவு கண்டுபிடிப்பு ஆய்வகமாகும். புதிய பிரத்யேக இணையதளங்கள், கூடுதலாக, புள்ளிவிவரப் பிரிவு, தொழில்துறைகளின் வருடாந்திர ஆய்வு , பொருளாதார மக்கள் தொகை ஆய்வு, தேசிய மாதிரி ஆய்வு உள்ளிட்ட முக்கியமான புள்ளிவிவர களங்களுக்கான தகவல் பலகையை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிச் செல்லும்போது, கொள்கை மற்றும் திட்டங்கள் வகுப்பிற்குச் சரியான நேரத்தில் மற்றும் தரமான தரவுகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் மாற்ற செயல்முறையை விரைந்து முடிக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

****

 

(Release ID: 2140336)

AD/TS/PLM/SG

 


(Release ID: 2140486)
Read this release in: English , Urdu , Marathi , Hindi