புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் தினம் நாளை கொண்டாடப்படுகிறது : 'தேசிய மாதிரி ஆய்வின் 75 ஆண்டுகள்' என்பது இந்த ஆண்டு கருப்பொருள்
Posted On:
28 JUN 2025 8:57AM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நாளை (ஜூன் 29, 2025) அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 19-வது புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது. புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறையில் முன்னோடியான பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
சமூக-பொருளாதார திட்டமிடல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான கொள்கை வகுப்பில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் ஒரு கருப்பொருளுடன் புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "தேசிய மாதிரி ஆய்வின் 75 ஆண்டுகள்" என்பதாகும். இந்தியாவில் ஆதார அடிப்படையிலான முடிவெடுத்தல் மற்றும் நிர்வாகத்துக்கு உதவும் நம்பகமான மற்றும் சரியான தரவுகளை வழங்கும் தேசிய மாதிரி ஆய்வின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.
நாளை நடைபெறும் நிகழ்வை மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தொடங்கி வைக்கிறார். தொடக்க அமர்வில் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவ லட்சுமண் கரண்டிகர் மற்றும் மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
தேசிய மாதிரி ஆய்வின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், அமைச்சகம் ஒரு நினைவு நாணயமும் நிகழ்ச்சியில் வெளியிடப்படும். இந்த நிகழ்வில் பல முக்கியமான புள்ளிவிவர வெளியீடுகளும் வெளியிடப்படும். பல்வேறு மத்திய அமைச்சகங்கள், நித்தி ஆயோக், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள், கள ஆய்வு வல்லுநர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் இதில் பங்கேற்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
****
(Release ID: 2140329)
AD/TS/PLM/SG
(Release ID: 2140480)