விவசாயத்துறை அமைச்சகம்
'வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம்' என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சி - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்
Posted On:
27 JUN 2025 7:33PM by PIB Chennai
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், 'வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம்' என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும் என்று வலியுறுத்தினார். வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் வெற்றியை அமைச்சர் பாராட்டினார், மேலும் விவசாயிகளுக்கு உணவு உற்பத்தியின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதில் மரபணு திருத்தம், விதை சிகிச்சை மற்றும் இயற்கை வேளாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
போலி உரங்கள், தரமற்ற விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் திரு சவுகான் வலியுறுத்தினார். பின்வருவனவற்றின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்:
* தக்காளியின் ஆயுளை அதிகரித்தல்
* ஏற்றுமதி செய்யப்பட்டு உலர் பொடி தயாரிக்கப் பயன்படுத்தக்கூடிய பயிர்களை உருவாக்குதல்
* கரிம மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான அறிவியல் உண்மைகள் குறித்த தரவுகளைச் சேகரித்தல்
* மரபணு திருத்த ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல்
* வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் கீழ் விவசாயிகளின் தேவைக்கேற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளின் புதுமைகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும், பல்வேறு துறைகள், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் மாநில வேளாண் துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140262
***
AD/RB/DL
(Release ID: 2140286)