தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு வகையான நுண் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தல் தொடர்பான செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை ட்ராய் நீட்டித்துள்ளது

Posted On: 25 JUN 2025 3:03PM by PIB Chennai

‘6 ஜிகாஹெர்ட்ஸ் (குறைந்த அளவு), 7/13/15/18/21 ஜிகாஹெர்ட்ஸ், இ-பேண்ட் மற்றும் வி-பேண்ட் ஆகியவற்றில் நுண்ணிய அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான கருத்துக்களை 2025 மே 28-ம் தேதி மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி முறையே 25.06.2025 மற்றும் 09.07.2025 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தொழிற்சங்கங்கள், பல்வேறு தரப்பினர் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 02.07.2025 மற்றும் 16.07.2025 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் எதிர் கருத்துகளை advmn@trai.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. ஏதேனும் கூடுதல் தகவல்கள் அல்லது விளக்கங்களுக்கு இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்  ஆலோசகர் (நெட்வொர்க்ஸ், ஸ்பெக்ட்ரம் & உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-----

(Release ID: 2139487)

AD/TS/SV/KPG/KR


(Release ID: 2139569)
Read this release in: Gujarati , English , Urdu , Hindi