நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் சிபிஐசி-இன் முதன்மை தலைமை ஆணையர்கள், தலைமை ஆணையர்கள் மற்றும் தலைமை இயக்குநர்களுடனான மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்

Posted On: 20 JUN 2025 6:43PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) முதன்மை தலைமை ஆணையர்கள், தலைமை ஆணையர்கள் மற்றும் கள அமைப்புகளின் தலைமை இயக்குநர்களுடனான மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

 

இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் திரு அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா, சிபிஐசி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், சிபிஐசி வாரிய உறுப்பினர்கள் மற்றும் வருவாய்த் துறையின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

சிபிஐசி மாநாட்டின் முதல் நாளில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி உரையாற்றினார். மேலும், ஏற்றுமதி பரிசோதனைக்கான ஐஸ்டேப் சாதனத்தையும் அறிமுகப்படுத்தினார். இது பரிவர்த்தனை செலவு மற்றும் வர்த்தகத்திற்கான திருப்புமுனை நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்த மாநாட்டின் போது, ​​மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி பதிவு, பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் வரி செலுத்துவோரின் குறைகளைக் கையாளுதல் போன்ற பல்வேறு அளவுருக்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க மண்டலங்களுக்கு உத்தரவிட்டார்.

 

இந்த உரையாடலின் போது, ​​தொழில்நுட்பம் மற்றும் ஆபத்து அடிப்படையிலான அளவுருக்களைப் பயன்படுத்தி வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி பதிவு செயல்முறையை எளிதாகவும், தடையற்றதாகவும், மேலும் வெளிப்படையானதாகவும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை திருமதி சீதாராமன் வலியுறுத்தினார்.

 

ஜிஎஸ்டி பதிவுக்குத் தேவையான கட்டாய ஆவணங்கள், குறிப்பாக முக்கிய வணிக இடம் தொடர்பானவை குறித்து வரி செலுத்துவோர், வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளிடையே இலக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்குமாறு மத்திய நிதியமைச்சர் சிஜிஎஸ்டி அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். இது, பதிவு நிராகரிப்புகளையும் பதிவு தாமதங்களையும் குறைக்கவும், விண்ணப்பங்களை விரைவாக செயலாக்கவும் உதவும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். வரி செலுத்துவோருக்கு விண்ணப்பச் செயல்பாட்டில் வசதியாக ஜிஎஸ்டி பதிவுகளுக்கான பிரத்யேக உதவி மையத்தை அமைக்குமாறும் அவர் சிஜிஎஸ்டி மண்டலத் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138094

***

(Release ID: 2138094)

AD/RB/DL


(Release ID: 2138176)
Read this release in: English , Urdu , Marathi , Hindi