சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஜோத்பூரில் பாலைவனமாதலையும், வறட்சியையும் தடுப்பதற்கான உத்திகள் குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு
Posted On:
17 JUN 2025 5:33PM by PIB Chennai
பாலைவனமாதல், வறட்சி தடுப்புக்கான உலக தினத்தையொட்டி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஜோத்பூரில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி - கல்வி கவுன்சிலில் ஒரு நாள் தேசிய பயிலரங்கை நடத்தியது. "பாலைவனமாதலையும், வறட்சியையும் தடுப்பதற்கான உத்திகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் நிலையான நில மேலாண்மையைக் கையாள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலை வகித்தார்
தொடக்க அமர்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், நிலம் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். நிலையான விவசாய நடைமுறைகள், சமூகம் சார்ந்த முன்முயற்சிகள், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உலக அளவில் வனப்பரப்பளவு குறைந்து வரும் நிலையில், இந்தியா தனது வனப்பகுதியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றார். ஆரவல்லி மலைத்தொடர் நீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பது ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என அவர் தெரிவித்தார்.
***
(Release ID: 2136971)
PLM/RR/KR/DL
(Release ID: 2137000)