பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை 2025 மே மாதத்திற்கான மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 34-வது மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது

Posted On: 16 JUN 2025 12:00PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு துறை 2025 மே மாதத்திற்கான மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 34-வது மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பயனுள்ள வகையில் குறை தீர்க்கப்பட்ட 4 வெற்றிக் கதைகளையும் இந்த அறிக்கை கொண்டுள்ளது:

1. திரு ராஜேஷ் சவுத்ரியின் குறை தீர்ப்பு: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி பதிவில் தாமதம்.

அனைத்து துறை ரீதியான கேள்விகளுக்கும் பதிலளித்த போதிலும், திரு. ராஜேஷ் சவுத்ரியின்  ஜிஎஸ்டி பதிவு விண்ணப்பம் மூன்று மாத காலமாக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. வணிக பரிவர்த்தனைகளைத் தொடர சாத்தியமான ஜிஎஸ்டி எண்ணை வைத்திருக்க வேண்டியிருந்ததால், ஏற்பட்ட இந்த தாமதம் அவரது குறு சிறு மற்றும் நடுத்தர புத்தொழில் நிறுவனத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். தீர்வு காணக் கோரி, அவர் மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து, விவரங்களைச் சரிபார்த்து, ஜிஎஸ்டி பதிவை அங்கீகரித்தார். தற்போது ஒரு ஜிஎஸ்டி எண் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவரது குறை தீர்க்கப்பட்டது.

2. திரு பவன் ராஜ்புத்தின் குறை தீர்ப்பு: ஒழுங்கற்ற மின்சார விநியோகப் பிரச்சினை

பரேலியின் ராஜேந்திர நகரில் வசிக்கும் திரு பவன் ராஜ்புத், அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து ஏற்பட்ட தவறான இணைப்பின் காரணமாக அடிக்கடி மின் தடைகளை எதிர்கொண்டார். இது கோடைக்கால இரவுகளில் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வீட்டு உபகரணங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது. மின்சார உதவி எண் மூலம் பல புகார்களை எழுப்பிய போதிலும், பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. மேலும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன. இதற்கு தீர்வு காணக் கோரி, அவர் மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் புகார் செய்தார். மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டு, பழுதடைந்த இணைப்பை சரி செய்தனர். இந்தப் புகார் 15 நாட்களுக்குள் தீர்க்கப்பட்டது.

3. திரு ஃபைஸ் முகமது அய்யூப்பின் குறை தீர்ப்பு: தூய்மைப் பணி மற்றும் கொசு ஒழிப்புக்கான கோரிக்கை.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கரேலியில் உள்ள ஐனுதீன்பூரில் வசிக்கும் திரு ஃபைஸ் முகமது அய்யூப், தனது வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் கடுமையான கொசுத் தொல்லை ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்தார். விஷச்செடிகள் அதிகமாக வளர்வதாகவும், இதனால் பாம்புகள் வரக் கூடிய அபாயம் அதிகரித்து, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உடனடி நடவடிக்கை கோரி, அவர் மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் புகார் செய்து களைகளை அகற்றவும், கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவும், குப்பைகளை அகற்றவும் கோரிக்கை விடுத்தார். மதிப்பாய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தி படர்ந்திருந்த தாவரங்களை அகற்றி, கொசு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு கண்டனர்.

4. திருமதி. சக்ரபென் ரதிலால் சோலங்கி: மின்சாரக் கம்பியை இடமாற்றம் செய்தல்

திருமதி. வதோதராவின் உம்ராய் பகுதியைச் சேர்ந்த ஷக்ரபென் ரதிலால் சோலங்கி, தமக்கு சொந்தமான இடத்தின் வழியாகச் செல்லும் மேல்நிலை மின்சார சேவைக் கம்பியின் காரணமாக தமது கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று உள்ளூர் அலுவலகத்திற்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பித்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் அவருடைய சம்மதம் இல்லாமல் அளிக்கப்பட்ட இணைப்பை இடமாற்றம் செய்ய 5000-6000 ரூபாய் வரை கேட்கப்பட்டது. இதற்கு தீர்வு காணக் கோரி, அவர் மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் புகார் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து மதிப்பாய்வு செய்து மின் இணைப்பு சேவை உடனடியாக அருகிலுள்ள கம்பத்திற்கு மாற்றப்பட்டது.

***

(Release ID: 2136561)
AD/TS/IR/RR/KR

 


(Release ID: 2136611)
Read this release in: English , Urdu , Hindi