சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார்

Posted On: 13 JUN 2025 3:09PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தனது அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "சிறந்த நடைமுறைகள்" குறித்த மாநாட்டின் முதல் பதிப்பில் மெய்நிகர் மூலம் உரையாற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, பல்வேறு எய்ம்ஸ் நிறுவனங்கள் பின்பற்றும் முன்மாதிரியான நடைமுறைகளை எடுத்துரைக்கிறது. இதில் நோயாளிகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு, செயல்பாட்டுத் திறன், டிஜிட்டல் மாற்றம் மற்றும் கல்விச் சிறப்பு ஆகியவை இடம் பெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து (போபால், ஜம்மு, பிலாஸ்பூர், ஜோத்பூர், நாக்பூர், தியோகர், பாட்னா, கோரக்பூர், குவஹாத்தி, ராய்ப்பூர்) எய்ம்ஸ் நிறுவனங்கள், பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இந்த மாநாட்டில் இணைந்து செயல்படுகின்றன. இந்த நிகழ்வில் மத்திய சுகாதார செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தொடக்க உரை நிகழ்த்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் திரு நட்டா, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஒவ்வொரு எய்ம்ஸ் நிறுவனமும், மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு, உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்பை ஒருங்கிணைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு எய்ம்ஸ் நிறுவனமும், சுகாதார பராமரிப்பு மற்றும் கற்றல் மையமாக செயல்படுவதாகவும், சமமான, நம்பகமான மற்றும் சான்றுகள் சார்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமைகளை மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை திரு நட்டா வலியுறுத்தினார்.

மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நட்டா, "இந்த மாநாடு புதிய எய்ம்ஸ் மருத்துவமனையின் வளமான அனுபவங்களை கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி; மருத்துவமனை சேவைகள், நிர்வாகம் மற்றும் நோயாளிகளுக்கான வசதி உள்ளிட்ட மூன்று முக்கிய களங்களில் ஒருங்கிணைக்க முயலும் ஒரு முன்னோடி முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

எதிர்கால சுகாதார சவால்களை எதிர்கொள்ள மருத்துவர்களை தயார்படுத்துவதில் எய்ம்ஸ் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாகவும் திரு நட்டா சுட்டிக் காட்டினார்.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிராந்திய ரீதியாக பொருத்தமான ஆய்வுகள், நெறிமுறை சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மூலம் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிகளவில் பங்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136135

*****

AD/TS/GK/SG/KR

 


(Release ID: 2136169)
Read this release in: English , Urdu , Marathi , Hindi