மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவது, அரசு ஊழியர்களின் வழிகாட்டும் உணர்வாக இருக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர்

Posted On: 12 JUN 2025 6:58PM by PIB Chennai

மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, இன்று, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவது, அரசு ஊழியர்களுக்கு ஒரு வழிகாட்டும் மனப்பான்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் புதுமை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிர்வாகத்தின் கருவிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். தனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்து கொண்ட திரு பிர்லா, மக்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், அரசு ஊழியர்களை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்றும், அந்த நம்பிக்கைகளை நிறைவேற்றுவதும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் நலனுக்காக அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதும் அதிகாரிகளின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

 

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி ஏற்பாடு செய்திருந்த 127வது பயிற்சித் திட்டத்தின் அதிகாரி பயிற்சியாளர்களிடையே உரையாற்றும் போது திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

இந்தியாவின் ஒப்பற்ற பன்முகத்தன்மையை உள்ளடக்கிய மொழி, கலாச்சாரம், புவியியல் மற்றும் சமூகம் பற்றிக் குறிப்பிட்ட சபாநாயகர், பன்முகத்தன்மை இருந்தபோதிலும், கூட்டுப் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்பில் வேரூன்றிய ஒரு வலுவான ஜனநாயக மற்றும் நிர்வாக அமைப்பை நாடு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார். இந்த காரணத்திற்காக, உலகளாவிய ஜனநாயக நாடுகளிடையே இந்தியா தனித்து நிற்கிறது என்றும் அவர் கூறினார். அரசு நிர்வாகிகளின் முக்கிய பொறுப்பு கொள்கைகளை செயல்படுத்துவது மட்டுமல்ல, மிகவும் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்பதை சுட்டிக்காட்டிய திரு பிர்லா, ஒரு உணர்திறன் மிக்க, பச்சாதாபமுள்ள அதிகாரி, சமூகத்தின் நடத்தை, மனநிலை மற்றும் உள்ளூர் நிர்வாக முறைகளை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டார். சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், சமூகங்களை, குறிப்பாக நெருக்கடி மற்றும் சவால்களின் போது மேம்படுத்தக்கூடிய மாற்றத்தை உருவாக்குபவர்களாகவும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136012

 

---

AD/RB/DL


(Release ID: 2136057)
Read this release in: English , Urdu , Marathi , Hindi