மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2025 இந்திய வனப்பணி (முதல்நிலை) தேர்வின் முடிவை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 11 JUN 2025 7:29PM by PIB Chennai

கடந்த 25.05.2025 அன்று நடத்தப்பட்ட இந்திய வனப்பணி (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வனப்பணி (முதன்மை) தேர்வு 2025-க்கு தகுதி பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் தற்காலிகமானது. தேர்வு விதிகளின்படி, தகுதி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும் பின்வரும் விவரங்களை வழங்க/புதுப்பிக்க ஒரு சாளரம் வழங்கப்படும்:

 

(அ) பெண்/மாற்றுத்திறனாளி/எஸ்சி/எஸ்டி போன்ற கட்டண விலக்கு பெற்ற தேர்வர்களைத் தவிர, மற்றவர்கள் 2025 இந்திய வனப்பணி (முதல்நிலை) தேர்வில் சேர ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

 

(ஆ) எழுத்தர், உதவி சாதனம் மற்றும் வினாத்தாள் தொடர்பான விவரங்களை பெரிய எழுத்துருவில் சமர்ப்பித்தல்/புதுப்பித்தல் (முதன்மைத் தேர்வுக்கு).

 

(இ) அரசிதழ் அறிவிப்பை சமர்ப்பித்தல் (ஒரு தேர்வர் மெட்ரிகுலேஷன் தேர்வுக்குப் பிறகு பெயரை மாற்றியிருந்தால் மற்றும்/அல்லது  குடிமைப் பணிகள் தேர்வு 2025க்கான இணையவழி விண்ணப்பத்தில் அவரது மெட்ரிகுலேஷன் அல்லது உயர்கல்விச் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயருடன் பொருந்தவில்லை என்றால்).

 

இந்த விவரங்களை நிரப்புவதற்கும் சமர்ப்பிப்பதற்குமான சாளரம் 2025  ஜூன் 16 முதல் 25 வரை ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.

 

தேர்வர்கள், புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை அணுகி, கூடுதல் தகவல்களைத் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலமாகவும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135792

****

 

(Release ID: 2135792)

AD/RB/DL


(Release ID: 2135839)