வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜவுளி ஏற்றுமதிக்கான பணிக்குழுவின் முதலாவது கூட்டம் வர்த்தகத்துறைச் செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் நடைபெற்றது
Posted On:
11 JUN 2025 5:50PM by PIB Chennai
இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பிரச்சனைகள் மற்றும் உத்திகள் குறித்து விவாதிக்க, ஜவுளி ஏற்றுமதிக்கான பணிக்குழுவின் முதல் கூட்டம், வர்த்தகத்துறைச் செயலாளர் திரு சுனில் பர்த்வால் தலைமையில் நேற்று (2025 ஜூன் 10) தில்லியில் உள்ள வனிஜ்ய பவனில் நடைபெற்றது.
ஜவுளித் துறை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே ஜவுளிப் பணிக்குழுவை அமைப்பதன் முதன்மை நோக்கமாகும். இதில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்துவதும் இதன் நோக்கமாகும். உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிப் பங்களிப்பை அதிகரிப்பதற்கான சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், உத்திகளை உருவாக்கவும் அனைத்து பங்குதாரர்களிடையேயும் தீவிர ஒத்துழைப்புக்கு இது வழிவகுக்கும்.
இக்கூட்டத்தின் போது நடைபெற்ற விவாதங்கள், முழு ஜவுளி மதிப்புச் சங்கிலி தொடர்பான விவகாரங்கள் மற்றும் பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இதில் ஆடை உற்பத்தி அலகுகளில் சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கான மின் வர்த்தகத்தை வலுப்படுத்துதல், உழைப்பு, உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கான செலவு போட்டித்தன்மை, திறன் மேம்பாடு, வர்த்தக முத்திரை, வட்டி மானியத் திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள், சான்றிதழ் மற்றும் பரிசோதனைக்கான உதவி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஏற்றுமதியாளர்களுக்கான பிணைய ஆதரவு கடன், ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135753
****
AD/TS/IR/KPG/DL
(Release ID: 2135786)