புவி அறிவியல் அமைச்சகம்
உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்தை வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், ஐநா பெருங்கடல் மாநாட்டில் ஆழ்கடல் இயக்கம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஆகியவற்றை எடுத்துரைத்தார்
Posted On:
10 JUN 2025 5:50PM by PIB Chennai
நீஸ் நகரில் நடைபெறும் மூன்றாவது ஐநா பெருங்கடல் மாநாட்டில் பெருங்கடல் தூய்மை குறித்த உலகளாவிய செயல்திட்டத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய புவி அறிவியல் இணையமைச்சர் (தனிபொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்தை வலியுறுத்தியதோடு, ஆழ்கடல் பகுதியில் துரப்பணப்பணிகள், கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், நீடிக்கத்தக்க மீன்வளம் ஆகியவற்றுக்கான முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.
“பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் நீடிக்கவல்ல பயன்பாட்டிற்கான பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் அனைத்து செயற்பாட்டாளர்களையும் அணிதிரட்டுதல்” என்ற மையப்பொருளுடன் பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவின் இணை தலைமையுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். நீருக்கு கீழ் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை குறித்த நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்கு 14-ஐ செயல்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
உலகளாவிய பல்லுயிர்ப்பெருக்கம் இலக்குகளுக்கு பங்களிப்பு செய்வதற்காக இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு பகுதிகளில் தற்போதுள்ள தனிச்சிறப்பு பொருளாதார மண்டலங்களின் 6.6 சதவீதம் பரப்பளவு என்பதை மேலும் விரிவுபடுத்துவது பற்றியும் அமைச்சர் பேசினார்.
கடற்கரை மாசு பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், தூய்மையான கடல், பாதுகாப்பான கடல் என்ற இயக்கத்தின் மூலம் 2022-க்கு பின் இந்தியாவில் 1000 கி.மீ. தூரத்திற்கு கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு 50,000 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135434
***
AD/TS/SMB/AG/DL
(Release ID: 2135462)