தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெறும் தேர்தல் ஒருமைப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் சிறப்புரை

Posted On: 09 JUN 2025 3:23PM by PIB Chennai

தேர்தல் ஒருமைப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் சிறப்புரையாற்றுகிறார். ஸ்பெயினில் உள்ள ஸ்டாக்ஹோம்  நகரில் இம்மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை  மூன்று நாட்கள் இம்மாநாடு  நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்வீடன் சென்றுள்ள தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர்,   வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தேர்தலில் வெளிநாட்டில் வசித்து வரும் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் பதிவு முறை மற்றும் அஞ்சல் வாக்கு மேலாண்மை அமைப்பின் மின்னணு பரிமாற்றம் (ETPBMS) போன்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் தேர்தல் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாளை தொடங்கவுள்ள தேர்தல் ஒருமைப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தொடக்கவுரையாற்றுகிறார். இந்தியாவில் தேர்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்வதில் உலக நாடுகள் ஆர்வத்துடன் உள்ளதாக அவர் கூறினார். ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம், ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து  இந்த சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, மெக்சிகோ, மங்கோலியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளின் தலைமைத் தேர்தல் ஆணையர்களை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது, போன்ற சர்வதேச மாநாடுகள் எதிர்காலத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தலைசிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும்  உதவிடும் என்று அவர் கூறினார்.

பின்னர் ஐடியா அமைப்பின் இயக்குநர் (ஆசியா-பசிபிக்) திருமதி லீனா ரிக்கிலா தமாங், நமீபியா தேர்தல் ஆணையத்தின் தலைவர் டாக்டர் எல்சி டி. நிகிகெம்புவா, மொரீஷியஸின் தேர்தல் ஆணையர் திரு அப்துல் ரஹ்மான் முகமது இர்ஃபான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தேர்தல் ஆணையர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2135105  

***

AD/TS/SV/AG/KR

 


(Release ID: 2135142)
Read this release in: English , Urdu , Hindi