கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கோபன்ஹேகன் வணிகப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடல்சார் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் உரையாற்றினார்
Posted On:
07 JUN 2025 6:54PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இன்று கோபன்ஹேகன் வணிகப் பள்ளியில் (CBS) மதிப்புமிக்க ப்ளூ எம்பிஏ வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த அமர்வு இந்தியாவின் வலுவான பொருளாதாரப் பாதை, விரிவடையும் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சியை சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் ஒருங்கிணைக்கும் நாட்டின் முயற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மதிப்புமிக்க இந்த வணிகப் பள்ளியைப் பார்வையிட்ட இந்தியாவின் முதலாவது மத்திய அமைச்சர் என்ற பெருமையையும் திரு சோனோவால் பெற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், சாகர்மாலா திட்டம், கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டம் - 2047 ஆகியவற்றால் இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றார். இவை இரண்டும் நிலையான உள்கட்டமைப்பு, பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து, எதிர்காலத்திற்கு ஏற்ற கடல்சார் சூழல் அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என அமைச்சர் கூறினார்.
நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ள இந்தியாவின் பொருளாதார எழுச்சி, உள்நாட்டு, சர்வதேச கடல்சார் வணிகங்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார். நிலைத்தன்மை இந்தியாவின் கடல்சார் கொள்கையின் மையமாக உள்ளது என அவர் தெரிவித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் முக்கிய துறைமுகங்களில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என திரு சர்பானந்த சோனாவால் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134889
***
(Release ID: 2134889)
AD/TS/PLM/DL
(Release ID: 2134908)