ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலகச் சுற்றுச்சூழல் தினம் 2025-ஐ குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு தேசிய ஆயுர்வேத வித்யாபீடம் ஏற்பாடு செய்திருந்தது. “பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு முடிவுகட்டுவது” குறித்த பசுமை முன்முயற்சிக்கு மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார்

Posted On: 05 JUN 2025 3:21PM by PIB Chennai

உலகச் சுற்றுச்சூழல் தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு முடிவுகட்டுவது” என்ற மையப்பொருளுடன் புதுதில்லியில் உள்ள ஆயுஷ் அமைச்சக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு தேசிய ஆயுர்வேத வித்யாபீடம் ஏற்பாடு செய்திருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடிக்கத்தக்க வாழ்க்கை நடைமுறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றுடன் ஆயுர்வேதத்தின் நெருக்கமான தொடர்பை எடுத்துரைப்பது இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வை மத்திய ஆயுஷ்  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சக செயலாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, தேசிய ஆயுர்வேத வித்யாபீட இயக்குநர் வைத்திய வந்தன சிரோஹா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆயுர்வேதக் கோட்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் பற்றி அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எடுத்துரைத்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் நீடிக்கவல்ல வாழ்க்கை முறைக்கான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார். பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு  முடிவு கட்டவும், ஆரோக்கியமான பூமியை மேம்படுத்தவும் நாம் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான உறுதிப்பாடு, அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அடையாளமாக இந்த நிகழ்வின் போது பங்கேற்பாளர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134140

***

AD/TS/SMB/RR/KR


(Release ID: 2134170)