நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி, மேம்பாட்டை எளிதாக்குதல் குறித்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 04 JUN 2025 5:57PM by PIB Chennai

ஆராய்ச்சி - மேம்பாட்டை எளிதாக்குதல் குறித்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை 2025 ஜூன் 3, 4, தேதிகளில் நித்தி ஆயோக் நடத்தியது. டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர் இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் இக் கூட்டம் நடைபெற்றது. பிராந்திய ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனை கூட்டங்களின் வரிசையில் இது இரண்டாவது கூட்டமாகும். இக் கூட்டத்தில் முதன்மையான பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்கள், அறிவியல் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத், ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். காலாவதியான செயல்திறன் சார்ந்த நிதி மாதிரிகளை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர்  டாக்டர் என். கலைசெல்வி, இது போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்.

மே 2025-ல் லக்னோவில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இக் கூட்டத்தில் ஆழமான உரையாடல்கள் இடம் பெற்றன.

 

பொது துறை, தனியார்  துறை ஒத்துழைப்பு, இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான ஆதரவு ஆகியவை குறித்த விவாதங்களும் இதில் இடம்பெற்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள், நாட்டின் அறிவியல் ஆய்வை மேம்படுத்துவதற்காக நித்தி ஆயோக் உருவாக்கி வரும் தேசிய சீர்திருத்த உத்திக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

***

(Release ID: 2133874)
AD/SM/PLM/RR/DL


(Release ID: 2133914)
Read this release in: English , Urdu , Hindi , Marathi