கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை கடல்சார் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இந்தியா, நார்வே இருதரப்பு பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தின

Posted On: 04 JUN 2025 5:58PM by PIB Chennai

இந்தியா – நார்வே இடையிலான கடல்சார் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை ஆராயவும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்  அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். ஒஸ்லோவில்  இன்று நடைபெற்ற நிகழ்வின் போது, நார்வேயின் போக்குவரத்து அமைச்சர் திரு ஜான்-ஐவர் நைகார்டு, மீன்வளம், பெருங்கடல் கொள்கை அமைச்சர் திரு மரியன்னே சிவர்ட்சன் ஆகியோருடன் அமைச்சர் சந்திப்புகளை நடத்தினார்.

'பசுமை கடல்சார் தொழில்நுட்பங்களின்' பயன்பாட்டை மேம்படுத்தும் முயற்சியாக, திரு சோனோவால் போக்குவரத்து அமைச்சர் ஜான்-ஐவர் நைகார்டுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். தனது கடல்சார் துறையை நவீனமயமாக்குவதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட உந்துதலை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் மின்னணு மாற்றத்தில் நாட்டின் முன்முயற்சிகளை சுட்டிக் காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 மற்றும் கடல்சார் அமிர்தகால தொலைநோக்கு 2047 ஆகியவற்றின் கீழ் துறைமுக உள்கட்டமைப்பு, பசுமை கப்பல் போக்குவரத்து, கப்பல் கட்டுதல் மற்றும் மின்னணு மயமாக்கலை மேம்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் பசுமை எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம், தனது துறைமுகங்களை உலகளாவிய முதலீட்டு மையங்களாக மாற்றும் துணிச்சலான பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133875

-----

AD/IR/KPG/DL


(Release ID: 2133913)