சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மூத்த குடிமக்கள் குழுமத்தின் 4-வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், முதியோர் நலன் மற்றும் அதிகாரமளிப்புக்கான முன்னேற்றப் பாதை குறித்து விவரித்தார்

Posted On: 04 JUN 2025 5:13PM by PIB Chennai

தேசிய மூத்த குடிமக்கள் குழுமத்தின் 4-வது கூட்டம் இன்று புதுதில்லியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. தற்போதுள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கும், வளர்ந்து வரும் தேவைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், வளர்ச்சியைடந்த இந்தியா @2047-ன் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த எதிர்கால திட்டத்தை அமைப்பதற்கும் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தளமாக செயல்பட்டது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மூத்த குடிமகனும் கண்ணியம், மரியாதை மற்றும் சமூகத்தில் சுறுசுறுப்பான ஈடுபாட்டுடன் வாழ்வதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை குழுமம் வலியுறுத்தியது.

இக்கூட்டத்தின் போது, தேசிய மூத்த குடிமக்கள் நலத்திட்டம், மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள முன்னேற்றம் குறித்து விரிவான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள்தொகை அடிப்படையில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை  குறித்து விவாதம் நடைபெற்றது. குறிப்பாக 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 20% மூத்த குடிமக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை செயல்படுத்துவதற்கும், சமூக ஈடுபாடு மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு பிரத்யேக குறை தீர்க்கும் பொறிமுறையை நிறுவுவதற்கான உத்திகளையும் குழுமம் ஆராய்ந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133837

----- 

AD/IR/KPG/KR


(Release ID: 2133897)
Read this release in: English , Urdu , Hindi , Marathi