மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
Posted On:
04 JUN 2025 5:39PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று ஒரு காணொலிப் பதிவை வெளியிட்டுள்ளார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முயற்சியில் பங்கேற்க முன்வர வேண்டும் என்று அதில் அவர் வலியுறுத்தியுள்ளார். 2025 ஜூன் 5 அன்று கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ என்ற தொலைநோக்குப் பார்வையை தீவிரமாக பின்பற்றுமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கம் 2025 ஜூன் 5 முதல் செப்டம்பர் 30 வரை 10 கோடி மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எண்ணிக்கைகளுக்கு அப்பால், இந்த முயற்சி இயற்கையின் மீதான அன்பையும் பொறுப்புணர்வையும் குறிக்கிறது என்று திரு தர்மேந்திர பிரதான் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும், குறிப்பாக மாணவர்கள் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஓராண்டாக நடைபெற்ற முதல் கட்ட இயக்கத்தில் 5.5 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் இதில் தீவிரமாக பங்கேற்றதாகவும், அதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
***
(Release ID: 2133860)
AD/SM/PLM/RR/KR/DL
(Release ID: 2133890)