அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மெட்டா தத்வா சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்புத் துறைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தளவாட உற்பத்தியை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரிக்கிறது

Posted On: 04 JUN 2025 1:42PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்  தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், புதுதில்லியில் உள்ள மெட்டா தத்வா சிஸ்டம்ஸ் தனியார் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான தளவாடப் பொருட்கள் மற்றும் தங்குமிடங்களை உருவாக்குவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், மெட்டா மெட்டீரியல் சர்ஃபேஸ் க்ளோக்கிங் சிஸ்டத்தை வணிகமயமாக்குவதாகும் - இது டாங்கிகள், விமானம் மற்றும் மொபைல் கட்டளை இடுகைகள் போன்ற முக்கிய பாதுகாப்பு தளவாடங்களை, கண்டறிதலில் இருந்து மறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றமாகும். இந்த அமைப்பு சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு தளங்களுக்கு தளவாடங்களின் கண்காணிப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. போர்க்கள மறைப்பில் ஒரு மாற்றத்தக்க நன்மையை வழங்குகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக், நாட்டின் உத்திசார்ந்த வலிமை, மேம்பட்ட ஆயுதங்களில் மட்டுமல்ல, நமது முக்கியமான தளவாடங்களை எவ்வளவு திறம்பட மறைத்து பாதுகாக்க முடியும் என்பதிலும் உள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய மெட்டா தத்வா சிஸ்டம்ஸ் தனியார் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஓய்வு பெற்ற விமானப்படை  வைஸ் மார்ஷல் பிரவீன் பட், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் முக்கிய ஆதரவுடன், நாங்கள் ஒரு அதிநவீன கருத்தை ஒரு தொழில்துறை யதார்த்தமாக மாற்றுகிறோம் என்றார்.  உலகத் தரம் வாய்ந்த, போருக்குத் தயாரான, முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தளவாடங்களை வழங்குவதில் தங்கள் கவனம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133746

----

AD/SM/SMB/IR/KPG/KR

 


(Release ID: 2133814)
Read this release in: English , Urdu , Hindi , Marathi